Tuesday, March 15, 2011

SFA media briefing - press clips


Following is from Dinamani, one of the largest Tamil Dailies (link)

பிரதமருக்கு முருங்கைக் கீரை-பப்பாளி!




First Published : 16 Mar 2011 04:56:38 AM IST







சென்னை, மார்ச் 15: வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி, தண்டுக் கீரை, கேரட், தினை அரிசி ஆகியவற்றை பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ""பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பை''ச் சேர்ந்தவர்கள் அளிக்க உள்ளனர்.
பாதுகாப்பான உணவிற்கான கூட்டமைப்பைச் சேர்ந்த டாக்டர் சுல்தான் இஸ்மாயில், டாக்டர் ஜி.சிவராமன், அனந்து, செல்வகணபதி ஆகியோர் உலக நுகர்வோர் உரிமை தினத்தை (மார்ச் 15) முன்னிட்டு செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
""தில்லியில் சர்வதேச வேளாண் கருத்தரங்கை பிரதமர் மன்மோகன் சிங் அண்மையில் தொடங்கி வைத்துப் பேசும்போது, மரபணு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வைட்டமின் ஏ சத்து செறிவூட்டப்பட்ட கோல்டன் அரிசி தேவை என்றார்.
இந்தியாவுக்கு இத்தகைய அரிசி தேவை இல்லை. இந்திய மருத்துவ ஆய்வியல் நிறுவனத்தின் தினசரி உணவுப் பரிந்துரைப் பட்டியலின்படி, "கோல்டன் அரிசியிலிருந்து' வைட்டமின் ஏ சத்தைப்பெற அதை 9 கிலோ அளவுக்குச் சாப்பிட்டாக வேண்டும்.
முருங்கைக் கீரை-கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ளது. கேரட்டைக் காட்டிலும் முருங்கைக் கீரையில் பீட்டா கரோட்டின் சத்து அதிகம். எனவே உடல் நலத்துக்கு பாதுகாப்பானதா என்று அறியப்படாத "கோல்டன் அரிசி' போன்ற மரபணுப் பயிர்களை அவசர அவசரமாக சந்தைப்படுத்த முயற்சி செய்வது வேதனை அளிக்கிறது.
உலகெங்கும் நடந்த பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில், உடல் எடை அதிகரிப்பதைத் தடுத்தல், நோய் எதிர்ப்பாற்றலை வளர விடாது செய்தல் போன்ற கேள்விகளை "கோல்டன் அரிசி' எழுப்பியுள்ள சூழலில், நமது அடிப்படை வாழ்வாதாரமான அரிசியில் இது போன்ற உத்திகளுக்கு இடம் அளிப்பது தவறு.
இதைத் தொடர்ந்து தில்லியில் உள்ள எங்களது கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் மூலம் பிரதமரிடம் மேலே குறிப்பிட்ட வைட்டமின் ஏ சத்து நிறைந்த முருங்கைக் கீரை, பப்பாளி உள்ளிட்டவற்றைப் பரிசாக அளிக்க முடிவு செய்துள்ளோம்.
இதுபோன்ற பாதுகாப்பற்ற உணவுப் பொருள்களை எதிர்க்கும் வகையில் "நான் சோதனை எலி அல்ல' என்று பொருள்படும் "ஐ ஆம் நோ லேப் ரேட்' இயக்கம் தமிழகத்தில் இந்த கூட்டமைப்பு மூலம் விரைவில் தொடங்கப்படும். சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் வரும் 19-ம் தேதி சிறு தானியங்கள் மற்றும் இயற்கை உணவு விழிப்புணர்வு விழா நடத்தப்பட உள்ளது. கடந்த ஆண்டு பி.டி. கத்தரியைத் தமிழகத்திலும், பின் இந்தியாவிலும் நிறுத்தி வைக்க இந்தக் கூட்டமைப்பு போராடியது குறிப்பிடத்தக்கது' என்று அவர்கள் தெரிவித்தனர்.
other press coverage links:
Times of India - http://timesofindia.indiatimes.com/city/chennai/NGO-sends-good-food-to-PM/articleshow/7714543.cms
Deccan Chronicle - http://www.deccanchronicle.com/channels/cities/chennai/tn-blind-gm-says-group-457

No comments: